வியாழன், 5 மே, 2016

தாஜ் நூர்

30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் 32


தாஜ் நூர்


பழம்பெரும் இசை அமைப்பாளர் கோவர்த்தன் அவர்களுக்குப் பிறகு எங்கள் சேலத்தின் பெருமை மிகு அறிமுகம். சேலம் பாரதி வித்யாலயா மற்றும் பாவடி ஆண்கள் பள்ளியில் படித்த தாஜ்நூர் , கல்லூரியை சேலம் அரசு கலைக் கல்லூரியில் படித்தார் .

1996 ஆம் ஆண்டு AR ரஹ்மானிடம் உதவியாளராக சேர்ந்த தாஜ் நூர் பாண்டிராஜின் வம்சம் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார் . சுமார் 15 படங்களுக்கு இதுவரை இசை அமைத்துள்ள தாஜ்நூர் , சினிமாவைத் தாண்டி சமூக அக்கறை உள்ள மனிதர்.

பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு வருந்தி அதை பாடலாக வெளியிட்டார். சேலம் நண்பர் ஈசன் இளங்கோ அவர்கள் கொண்டாடிய தமிழர் பொங்கல் விழாவிற்காக ஈசன்  இளங்கோ எழுதிய  பாடலை வேல்முருகன் குரலில் வெளியிட்டார்.

இப்போது பிரபலமாக உள்ள புதிய சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்திற்கு இசை இவரே.மேலும் பல படங்களுக்கு இசை அமைத்து நல்ல பாடல்களைத் தர , சேலம் மண்ணின் மைந்தனாக வாழ்த்துகிறேன் . 

படங்கள் ..
வம்சம் ,ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி , எத்தன் , ஸ்ட்ராபெர்ரி 
______________________________________

விட்டு விட்டு வெயிலும் அடிக்கிது
விட்டு விட்டு மழையும் அடிக்கிது
காதல் வந்து வானவில்ல
பாலம் போட்டு அழைக்கிது
தொட்டு தொட்டு பிடிக்கிது
தூண்டி போட்டு இழுக்குது
திட்டி திட்டி காலு ரெண்டும்
உன்னைதேடி நடக்குது

#மருதாணி பூவப்போல
மருதாணி பூவப்போல
குறு குறு குறு
வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சிலு
சூரக்காத்து நெஞ்சிக்குள்ள

மருதாணி பூவப்போல
மருதாணி பூவப்போல
குறு குறு குறு
வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சிலு
சூரக்காத்து நெஞ்சிக்குள்ள
மருதாணி பூவப்போல....
________________________________________
படம் : வம்சம்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : முகேஷ், சர்முகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக