30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் 34
ஜேம்ஸ் வசந்தன்
2008 ஆம் ஆண்டு தன் மாணவன் சசிகுமாரின் "சுப்ரமணியபுரம்" படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார் ஜேம்ஸ் வசந்தன் . சொந்த ஊர் திருச்சி. கல்லூரி வரை திருச்சியில் படித்த ஜேம்ஸ் வசந்தன் ,சென்னை பல்கலையிலும் டிரினிடியிலும் இசை பயின்றார். பிறகு கொடைக்கானலில் உள்ள பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிந்த போது அவரின் மாணவர் சசிகுமார். சசிகுமார் படம் இயக்கிய போது தன ஆசிரியரையே இசை அமைக்கவைத்தார்.
இதுவரை 15 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். வானவில் வாழ்க்கை என்ற படத்தை இயக்கினார் . சிறந்த தமிழ் ஆர்வலர். அழகாக தமிழை உச்சரிப்பவர். சினிமாவுக்கு வரும் முன் வாசனை என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். சுமார் 300 கிருஸ்துவ பக்தி கேசட்கள் வெளியிட்டுள்ளார். சன் டிவி , மக்கள் டிவி ஆகியவற்றில் நிகழ்சிகளை நடத்தினார் .
விஜய் டிவியில் ஒரு வார்த்தை ஒரு லட்சம் அவரின் புகழ் பெற்ற நிகழ்ச்சி. குடும்ப வாழ்க்கை பிரச்னை ( வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் மனைவி புகார் செய்ய கைதாகி சிறை சென்றார் ) அவரால் அதிக படங்கள் இசை அமைக்கமுடியவில்லை .
ஹிட் படங்கள் : சுப்ரமணியபுரம் , நாணயம் , ஈசன் , பசங்க ..
______________________________________
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
-
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய், போதத்தென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு
தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் ...
______________________________________
படம் : சுப்ரமணியபுரம்
பாடல் : யுகபாரதி
பாடகர் : பெல்லி ராஜ் , தீபா மரியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக