வியாழன், 12 மே, 2016

சந்தோஷ் நாராயணன்

30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் 35


சந்தோஷ் நாராயணன்


2012 ஆம் ஆண்டு அட்டகத்தி மூலம் அட்டகாசமாக அறிமுகமான சந்தோஷ் நாராயணின் சொந்த ஊர் திருச்சி . கல்லூரி முடித்த பிறகு AR ரஹ்மானிடம் சவுண்ட் ரெகார்டிங் இஞ்சினியராக பணியாற்றினார்.

அட்டகத்தியில் கானா பாலாவை அறிமுகம் செய்தார். இதுவரை 20 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இவர் நாளைய இயக்குனர்களின் தோழன் . கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி , ரஞ்சித் இவர்களின் எல்லா படமும் சந்தோஷ் தான் .

சந்தோஷ் நாராயணன் இசையில் ஜிகர்தண்டாவில் பாடியவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மீனாட்சி ஐயர் . கணவரைப் பிரிந்தவர் . சந்தோஷ் நாராயணன் இசையில் தொடர்ந்து பாடி மீனாட்சியை சந்தோஷ் திருமணம் செய்துகொண்டார் . இவருக்கு 17 வயதில் தீ (Dhee ) என்கிற  தீக்ஷிதா என்ற மகள் உண்டு. சந்தோஷின் வளர்ப்பு மகளாகிவிட்ட ( 32 வயது சந்தோஷ் க்கு 17 வயதில் மகள் )  தீட்சிதா இறுதிசுற்றில் வரும் ஏ சண்டக்காரா , உசுரு நரம்பில .. பாடல்களை பாடினார்.

விஜயின் 60 வதாவது படத்திற்கு இசை அமைக்கும் சந்தோஷ் நாராயணின் மைல்கல் சூப்பர் ஸ்டாரின் கபாலி ... டிரைலரே 1 கோடி ஹிட் என்பதால் , மிக கவனமாக இசை அமைத்துள்ளார் .

ஹிட் படங்கள் : அட்டகத்தி , சூதுகவ்வும் , ஜிகர்தண்டா , குக்கூ , 36 வயதினிலே , இறுதிசுற்று
______________________________________
வாடகைக்கு காதல் வாங்கி
வாழவில்ல யாரும்
என்னை மட்டும் வாழ சொல்லாதே
உடம்புக்குள்ள உசுரவிட்டு
போகசொல்லு நீதான்
உன்னைவிட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சியெல்லாம்
உந்தன் பூமுகம்
அது எந்தன் நியாபகம்

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோளக்காட்டு பொம்மைக்கொரு
சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா
கையில் ரேகையில்லை
கண்ணுக்குள்ள இப்ப
கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
வந்து சேரு
___________________________________
படம் : மெட்ராஸ்
பாடல் : கபிலன்
பாடகர் :  பிரதீப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக