திங்கள், 25 ஆகஸ்ட், 2014

வித்யாசாகர்

30 நாள் - 30 இசை - நாள் 1


வித்யாசாகர்


1989 ஆம் ஆண்டு பூமணம் என்ற தமிழ் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான வித்யாசாகர் தமிழ் , மலையாளம் , தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி மொழிகளில் 250 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். மனதை வருடும் பல மெல்லிசை பாடல்களை தந்தவர்.

2005 ஆம் ஆண்டு ஸ்வரபிஷேகம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த இசைக்கான தேசிய விருது பெற்றார். சிறந்த பண்பாளரான வித்யாசாகரோடு இசைப் பயணம் இனிதே தொடங்குகிறது.

முக்கிய படங்கள் : கர்ணா, தில் ,ரன் , கில்லி , அன்பே சிவம் , சந்திரமுகி , பார்த்திபன் கனவு, பூவெல்லாம் உன் வாசம் , மொழி ...

--------------------------------------------------------

பாதி ஜீவன் கொண்டு
தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் உன்னை
பார்த்த போது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே

ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா

மலரே மௌனமா
மலர்கள் பேசுமா

மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே...
----------------------------------------------

படம் : கர்ணா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக