30 நாள் 30 இசை - நாள் 2
சிற்பி
1993 ஆம் ஆண்டு கோகுலம் படத்தின் மூலம் அறிமுகமாகி , முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர். 50 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.எளிமையான இசை இவரின் அடையாளம். சிந்தி மொழி பாடலின் சாயல் இருந்தது என கூறினாலும் ''உள்ளத்தை அள்ளித் தா'' பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
''உன்னை நினைத்து'' படத்திற்காக 2002 ஆம் ஆண்டின் சிறந்த இசைக்கான தமிழக அரசு விருது பெற்றார். 1997 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
முக்கிய படங்கள் : கோகுலம் , நான் பேச நினைப்பதெல்லாம் , நாட்டாமை , உள்ளத்தை அள்ளித்தா
______________________________
கேட்காமல் காட்டும்
அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே
காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே
பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும்
பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல்
முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும்
சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல்
மிக மிக சுவாரஸ்யமானது காதல்...
______________________________
படம் : கோடம்பாக்கம்
பாடலாசிரியர்: விஜய் சாகர்
பாடியவர்கள் : ஹரிணி , ஹரிஷ் ராகவேந்திரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக