செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கங்கை அமரன்

30 நாள் 30 இசை - நாள் 6


கங்கை அமரன்


1979 இல் கே.பாக்யராஜின் ''சுவர் இல்லாத சித்திரங்கள்'' மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆன கங்கைஅமரன்.... இசை , பாடலாசிரியர் , இயக்குனர் , தயாரிப்பாளர் ,பாடகர் என தமிழ் திரையின் அனைத்து பகுதியிலும் முத்திரை பதித்து சாதனை புரிந்தவர். இளையராஜாவின் சகோதரர் . இயற் பெயர் அமர்.

''சுவர் இல்லாத சித்திரங்கள்'' முதல் 52 படங்களுக்கு இசை அமைப்பாளராக..... ''செந்தூர பூவே'' பாடல் (16 வயதினிலே) முதல் சுமார் 1000 பாடல்கள் பாடலாசிரியராக...
''கோழி கூவுது'' முதல் 22 படங்கள் இயக்குனராக .. கலக்கியவர் அமரன்.

இசை அமைத்த ஹிட் படங்கள் : சுவர் இல்லாத சித்திரங்கள் , நாளெல்லாம் பௌர்ணமி , வாழ்வே மாயம் , மௌன கீதங்கள் , ருத்ரா ....
________________________________

கூட்டாஞ்சோறு நீபோட
கும்மிப்போட்டு நான் பாட

சொல்லாம கிள்ளாத
வக்கீல் இல்ல வாதாட

வெக்கம் வந்து போராட
என்ன சொல்லி நான் பாட

சொந்தம்தான் மாறாது
ஊத்துத்தண்ணி ஆத்தோட

மோகத்த தூண்டாதீங்க
முந்தானை தாண்டாதீங்க

வாங்க அத வாங்க
எம்மடிமேல உக்காருங்க

நீதானா நெசந்தானா
நிக்கவச்சி நிக்கவச்சி பாக்குறே

ஆத்தாடி மடிதேடி
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறே
__________________________________

படம் : நாளெல்லாம் பௌர்ணமி
பாடல் : கங்கை அமரன்
பாடகர் : யேசுதாஸ் , சித்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக