30 நாள் 30 இசை - நாள் 4
பரத்வாஜ்
1998 இல் ''காதல் மன்னன்'' படத்தில் அறிமுகமான பரத்வாஜ் அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலி. CA பட்டதாரி . சிறுவயதிலேயே ஆல் இந்தியா ரேடியோ ,DD நிகழ்ச்சிகளுக்கு இசை அமைத்துள்ளார். இயக்குனர் சரண் மூலம் தமிழ் திரையில் நுழைந்தார்.
50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள பரத்வாஜின் முதலாவது ,25 வது ,50 வது படங்கள் அஜித் படங்கள் !.
2 முறை பிலிம்பேர் விருதும் , 2008 இல் கலைமாமணி விருதும் பெற்றார். இவர் இசையில் ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்காக கவிஞர் பா.விஜய் தேசிய விருது பெற்றார். அதே பாடலை பாடியதற்காக சித்ராவும் தேசிய விருது பெற்றார்.
திருக்குறளுக்கு இசை அமைக்கும் பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் அனைத்து பாடகர்களையும் பாட வைக்கிறார்.
ஹிட் படங்கள் : காதல் மன்னன் , அமர்க்களம் , பாண்டவர் பூமி , ரோஜா கூட்டம் ,ஜெமினி , வசூல்ராஜா MBBS , ஆட்டோகிராப் ....
______________________________
காதலி மூச்சு விடும்
காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும்
தேனீர் தீர்த்தம் என்பேன்
கடற்கரை மணலில் நமது
பேர்கள் எழுதி பார்ப்பேன்
அலை வந்து அள்ளிச் செல்ல
கடலைக் கொல்ல பார்ப்பேன்
உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்
நான் வெயிலை வெட்ட பார்ப்பேன்
மொட்டுகளே மொட்டுகளே
மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிறாள்
காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கயிலே
மென்மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது .....
______________________________
படம் : ரோஜா கூட்டம்
பாடல் : வைரமுத்து
பாடகர் : ஹரிஹரன் , சாதனா சர்க்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக