வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஆதித்யன்

30 நாள் 30 இசை - நாள் 8


ஆதித்யன்

 

1992 ஆம் ஆண்டு அமரன் படத்தில் அறிமுகமான ஆதித்யன் அவர்களின் சொந்த ஊர் தஞ்சாவூர் . முதல் படத்திலேயே வித்தியாசமான இசை மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்த படத்தில் வெத்தல போட்ட சோக்குல என்ற கானா பாடலை கார்த்திக்கை பாடவைத்தார். பெரிய ஹிட் ஆனது.

50 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள ஆதித்யன் சில பாடல்களை பாடியுள்ளார். 2003 வரை இசை அமைத்த ஆதித்யன் அதன் பிறகு சமையல் கலை வல்லுனராக கலக்கினார். இன்றைக்கும் அவர் சமையல் நிகழ்ச்சிகளை யூ டியூபில் பார்க்கலாம்.

ஹிட் படங்கள் : அமரன் , சீவலப்பேரி பாண்டி , லக்கி மேன் , அசுரன் , மாமன் மகள் ....
__________________________________
அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு
ஏய் மலையே மலையே
மேகத்தை எடுத்து தாவணி நீ போடு

இந்த காடே என் வீடு
என் உறவே என் ஆடு
அட கண்ணீர் சந்தோசம்
அது ரெண்டும் என் பாடு

மழை வந்தாலென்ன
இடி வந்தாலென்ன
நீ துணிஞ்சு விளையாடு
துணிஞ்சு விளையாடு

ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு
________________________________

படம் : சீவலப்பேரி பாண்டி
பாடல் : கே . ராஜேஸ்வர்
பாடகர் : சித்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக