செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

தேனிசைத்தென்றல் தேவா

30 நாள் - 30 இசை - நாள் 3


தேனிசைத்தென்றல் தேவா


1989 ஆம் ஆண்டு மனசுக்கேத்த மகாராசா படத்தின் மூலம் அறிமுகமான தேவா ..MSV , இளையராஜாவிற்கு பிறகு அதிக படங்களுக்கு இசை அமைத்தவர். இவருக்கு தேனிசை தென்றல் என்ற பட்டத்தை வழங்கியது MS .விஸ்வநாதன் அவர்கள் . குறுகிய காலத்தில் அதிக படங்களுக்கு இசை அமைத்து சாதனை புரிந்தவர்.

3 முறை தமிழக அரசின் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது பெற்றுள்ளார்.1992 இல் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. தற்போது தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக ஜெயலலிதா நியமித்துள்ளார்.

ஹிட் படங்கள் : அண்ணாமலை ,சூரியன் , ஆசை , பாட்ஷா , அவ்வை சண்முகி , காதல் கோட்டை , அருணாசலம் , நேருக்கு நேர் , வாலி ,குஷி , பஞ்ச தந்திரம் ...

_______________________________________

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே

என் காதலா... என் காதலா.....
நீ வா! நீ வா! என் காதலா...!

#மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா...

______________________________

படம் : நேருக்கு நேர்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகர் : ஹரிணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக