ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஜிப்ரான்‬

30 நாள் 30 இசை - நாள் 27

 ஜிப்ரான்‬



2011 ஆம் ஆண்டு ''வாகை சூடவா'' படத்தின் மூலம் அறிமுகமாகி இதுவரை 7 படங்கள் மட்டுமே ஜிப்ரான் இசையில் வந்திருந்தாலும் இவரின் இசை பயணம் பெரியது. சொந்த ஊர் கோவை . கிப்ரானின் தந்தையின் தொழிலில் ஏற்ப்பட்ட நஷ்டத்தின் காரணமாக சென்னைக்கு குடி பெயர்ந்தனர்.

இசை மீது ஆர்வம் ஏற்பட்டு முறைப்படி கீபோர்ட் கற்றுக்கொண்டார். 2000 ஆம் ஆண்டு சொந்தமாக ஸ்டூடியோ துவங்கிய ஜிப்ரான், அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 700 விளம்பரங்களுக்கு இசை அமைத்தார். அனைத்து மொழிகளிலும் சுமார் 800 சீரியல்களுக்கு டைட்டில் பாடலுக்கு இசை அமைத்தார்.

அடுத்த தலைமுறையின் நம்பிக்கையான இசை அமைப்பாளர்களில் ஒருவராக ஜிப்ரான் இருப்பார் என்கிறார் கலைஞானி கமல்ஹாசன். அதுமட்டுமல்ல கமலின் அடுத்த 3 படங்களுக்கும் ஜிப்ரான் தான் இசை!. ( விஸ்வரூபம் -2 , உத்தம வில்லன் , பாபநாசம் )

படங்கள் : வாகை சூட வா , வத்திகுச்சி , குட்டிபுலி , நையாண்டி , அமர காவியம் ....
______________________________
எங்க ஊரு பிடிக்குதா
எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல
சுட்ட ஈரல் மணக்குதா

முட்டை கோழி பிடிக்கவா
முறை படி சமைக்கவா
எலும்புங்க கடிக்கயில்
என்ன கொஞ்ச நினைக்க வா

கம்மஞ்சோறு ருசிக்க வா
சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடகத்தா ரசம் வச்சு
மடக்க தான் பாக்குறேன்

ரெட்டை தோசை
சுட்டு வச்சு காவ காக்குறேன்
முக்கண்ணு நொங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்குற...

# சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல
நெஞ்சம் சத்தம் போடுதே...
________________________________
படம் : வாகை சூட வா
பாடல் : வைரமுத்து
பாடகர் : சின்மயி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக