வெள்ளி, 5 செப்டம்பர், 2014

ஹம்சலேகா‬

30 நாள் 30 இசை - நாள் 13

 ஹம்சலேகா‬

 

  1987 இல் ''பிரேமலோகா'' என்ற கன்னட படத்தில் அறிமுகமான ஹம்சலேகா அவர்கள் இசைத்துறையில் சகலகலா வல்லவன் . சொந்த ஊர் மைசூர் . தமிழில் சில படங்களுக்கே இசை அமைத்திருந்தாலும் ,கன்னடத்தில் 300 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். எல்லா இசை கருவிகளையும் வாசிப்பார். கன்னட சினிமாவில் பாடலாசிரியர் , பாடகர் , கதாசிரியர் , வசனகர்த்தா .. என எல்லா ஏரியாவிலும் சாதித்தவர்.

''கனயோகி பஞ்சக்சரி கவயி'' என்ற கன்னட படத்திற்காக 1995 இல் தேசிய விருது பெற்றார். 6 முறை பிலிம்பேர் விருதும் , எண்ணற்ற விருதுகளை கர்நாடக அரசிடமும் பெற்றுள்ளார். ''Hamsalekha Desi Vidya Samsthe '' என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி ஏழை மாணவர்களுக்கு கல்வி மற்றும் இசை பயிற்சி அளிக்கிறார்.

எந்த பெண்ணிடம் இல்லாத ஒன்று... , காதல் இல்லை என்று சொன்னால் ..., பூவே உன்னை நேசித்தேன்.. , ஓ காதல் என்னை காதலிக்கவில்லை...
ஹிட் படங்கள் : கொடி பறக்குது , நாட்டுக்கொரு நல்லவன் , வேலை கிடைச்சுருச்சு , பருவ ராகம் , கேப்டன் மகள் ....
_____________________________________
வானத்து இந்திரரே
வாருங்கள் வாருங்கள்

பெண்ணுக்குள் என்ன இன்பம்
கூறுங்கள் கூறுங்கள்

இதுபோல் இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை

இவளின் குணமோ மணமோ
மலருக்குள் இல்லை

‪#‎சேலை‬ கட்டும் பெண்ணுக்கொரு
வாசம் உண்டு

கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா

சேலை கட்டும் பெண்ணுக்கொரு
வாசம் உண்டு
கண்டு கொண்டேன்..
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்...
________________________________
படம் : கொடி பறக்குது
பாடல் : வைரமுத்து
பாடகர் : SPB , சித்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக