திங்கள், 8 செப்டம்பர், 2014

SP.பாலசுப்ரமணியம்‬

30 நாள் 30 இசை - நாள் 16

 SP.பாலசுப்ரமணியம்‬



1977 இல் கன்யாகுமரி என்ற தெலுங்கு படத்தில் இசை அமைப்பாளராக அவதாரம் எடுத்த பாலுவின் முதல் தமிழ் படம் 1981 இல் வெளிவந்த ''தையல்காரன்'' . அற்புதமான இசை ஞானம் உள்ள பாலுவின் இசையை தமிழ் சினிமா ஏனோ கண்டுகொள்ளவில்லை . தமிழில் சில படங்கள் மட்டும் இசை அமைத்திருந்தாலும் தெலுங்கு , கன்னடம் என சுமார் 100 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

- 15 மொழிகளில் சுமார் 40000 பாடல்கள் பாடி , உலகிலேயே அதிக பாடல் பாடிய கின்னஸ் சாதனை
- 100 படங்களுக்கு இசை
- 75 படங்களில் நடிகராக..
- 2001 இல் பத்ம ஸ்ரீ
- 2011 இல் பத்ம பூஷண்
- 6 முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருது
- 4 டாக்டர் ( கௌரவ ) பட்டங்கள்
- 23 முறை ஆந்திர அரசின் நந்தி விருது
- 100 க்கும் மேற்பட்ட தமிழ் , இந்திய , சர்வதேச விருதுகள் ...

இவை எல்லாவற்றையும் விட பெருமை .. ஆந்திராவில் பிறந்தவராக இருந்தாலும் தமிழை யாராவது தவறாக உச்சரித்தால் , ஒரு தமிழாசிரியரை போல சரி செய்வது ... நாமெல்லாம் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

படங்கள் : தையல்காரன் , துடிக்கும் கரங்கள் , மயூரி , சிகரம் , உன்னை சரணடைந்தேன்.
____________________________________
என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ

என் காதலா உன் காதலா
நான் காணும் கோலமோ

என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ

பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ

பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ

‪#‎இதோ‬ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ

இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ...
________________________________
படம்: சிகரம்
பாடல் : வைரமுத்து
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக