30 நாள் 30 இசை - நாள் 22
தேவி ஸ்ரீ பிரசாத்
DSP என்ற தேவி ஸ்ரீ பிரசாத் ''தேவி'' என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். இதே படம் மூலம் தமிழிலும் அறிமுகம். பிறந்தது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்.படித்தது சென்னையில். இசை அமைப்பாளர் , பாடகர் ,பாடலாசிரியர்... என பல துறைகளிலும் சாதித்தாலும் மேடை பாடகராக அசத்துவார்.
ரஹ்மான் , யுவன் இசையிலும் பாடியுள்ளார். சுமார் 100 படங்களுக்கு இசை அமைத்துள்ளார் . 5 முறை பிலிம்பேர் விருது உட்பட நிறைய விருதுகள் பெற்றுள்ளார். தசாவதாரம் படத்திற்கு பின்னணி மட்டும் அமைத்தார்.
ஹிட் பாடல்கள் :
1. நீ வரும் போது நான் நனைவேனா - மழை
2. கண்ணு ரெண்டும் ரங்கா ராட்டினம் - குட்டி
3. பூப்பறிக்க நீயும் - ச.ச. உனக்கும் எனக்கும்
4.கட்டு கட்டு கீரை கட்டு - திருப்பாச்சி
5. காத்தாடி போல ஏண்டி - மாயாவி
6. கண் மூடி திறக்கும் போது - சச்சின்
7.அடடா அடடா அடடா - சந்தோஷ் சுப்ரமணியம்
8. டாடி மம்மி வீட்டில் - வில்லு
9.மியாவ் மியாவ் பூனை - கந்தசாமி
10. காதல் வந்தாலே - சிங்கம்
________________________________
ஏதேதோ தேசங்களை
சேர்க்கின்ற நேசம்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசம்தனை
காதல் என்று பேர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை
உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர் தானடி
#நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய்
கைகளே ஆசையாய்
வைய்யமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே
சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே...
__________________________
படம் : மன்மதன் அம்பு
பாடல் : கமல்ஹாசன்
பாடகர் : கமல்ஹாசன் , ப்ரியா ஹிமேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக