30 நாள் 30 இசை - நாள் 12
மரகதமணி
1990 இல் ''மனசு மமதா'' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான மரகதமணி அதே ஆண்டு ''அழகன்'' மூலம் தமிழில் கால் பதித்தார்.
ஆந்திராவை சேர்ந்த இவரின் இயற்பெயர் MM கீரவாணி. மரகதமணி என்ற பெயரில் தமிழிலும் , MM.க்ரீம் (Kreem) என்ற பெயரில் ஹிந்தியிலும் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தெலுங்கில் வெற்றி இசைமைப்பாளராக உள்ள மரகதமணி , தமிழில் சுமார் 25 படங்களே இசை அமைத்திருந்தாலும் , பெரும்பாலான தெலுங்கு டப்பிங் படங்களுக்கு இவர்தான் இசை.!
1997 இல் ''அன்னமையா'' என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருது பெற்றார். 8 முறை ஆந்திர அரசின் நந்தி விருதும் , 5 முறை பிலிம் பேர் விருதும் , ஒருமுறை தமிழக அரசு விருதும் ( அழகன் ) பெற்று சாதனை படைத்தவர்.
வெற்றி படங்கள் : அழகன் ,நீ பாதி நான் பாதி , வானமே எல்லை , ஜாதி மல்லி , பிரதாப் , கொண்டாட்டம் , நான் ஈ
______________________________________
எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதங்கள் இன்றுதான் வந்தது
சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்....
____________________________________
படம் : அழகன்
பாடல் : புலமைபித்தன்
பாடகர் : SP பாலசுப்ரமணியம், சந்தியா
பாடல் : புலமைபித்தன்
பாடகர் : SP பாலசுப்ரமணியம், சந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக