30 நாள் 30 இசை - நாள் 25
D இமான்
2001 ஆம் ஆண்டு விஜய் நடித்த ''தமிழன்'' படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆன D.இமான் , தமிழ் திரையின் இன்றைய மெல்லிசை மன்னர். சொந்த ஊர் சென்னை. பச்சையப்பா கல்லூரி மாணவர். மனைவி மோனிகா , 2 பெண் குழந்தைகள் .
சுமார் 50 தமிழ் படங்களுக்கும் , 10 தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். சினிமாவுக்கு வரும் முன்பே சின்ன திரையில் இசை அமைத்து வந்தார். கோலங்கள் , கிருஷ்ண தாசி , திருமதி செல்வம் போன்ற சீரியல்கள் ... இவ்வளவு இருந்தாலும் இமானை எல்லோருக்கும் தெரிய படுத்தியது கும்கி.. கும்கி படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றார்.
நடிகர் அர்ஜுனின் 2004 க்கு பின் வந்த எல்லா படங்களுக்கும் ( கிரி , ஆணை ,சின்னா ,,வாத்தியார் , மதராசி , மருதமலை ,துரை,வந்தே மாதரம் ) இமான் தான் இசை . அதே போலவே சுந்தர்.C யின் படங்களுக்கும் ... தற்போது பிறப்பு சாலமனின் கயல் படத்தின் பாடல்கள் எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிட் படங்கள் :
விசில் , திருவிளையாடல் ஆரம்பம் , மைனா , கும்கி , வருத்தபடாத வாலிபர் சங்கம் , பாண்டிய நாடு ..
_____________________________________
அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்
மனசயே தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல
அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்
#சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே
கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்....
______________________________________
படம் : கும்கி
பாடல் : யுகபாரதி
பாடகர் :ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக