30 நாள் 30 இசை - நாள் 21
ஸ்ரீகாந்த் தேவா
2000 ஆம் ஆண்டு டபுள்ஸ் என்ற படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் தேவா , தேனிசைதென்றல் தேவா அவர்களின் புதல்வர். அவர் காதல் மனைவி பாடகி பெபி மணி (ரஹ்மான் இசையில் மின்சார கனவில் ஸ்ட்ராபெரி கண்ணே .. பாடலை பாடியவர்) . இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் .
ஆரம்பத்தில் அப்பா இசை அமைக்கும் படங்களில் பின்னணி இசை அமைத்தார். பிறகு தனியாக இசை அமைக்க துவங்கி 50 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 2004 ஆம் ஆண்டு M.குமரன்S/O மகாலட்சுமி படத்திற்காக தமிழக அரசு விருது பெற்றார்.
நிறைய மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜெயம் ரவியின் ''பூலோகம்'' படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
ஹிட் படங்கள் :
ஏய் , குத்து , M.குமரன் S/O மகாலட்சுமி , ஜோர் , சாணக்யா , சிவகாசி , ஈ , 6 மெழுகுவர்த்திகள் , ....
___________________________________
சகி உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்
உன்னை காணவே நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்
#சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டு கிளியே நீ
சொல்லு வசியம் வைத்தாயோ...
____________________________________
படம் : M.குமரன் S/O மகாலட்சுமி
பாடல் : நா.முத்துகுமார்
பாடகர் : ஹரீஸ்ராகவேந்திரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக